தேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி... கட்சியினர் மீது லாலுவின் மூத்த மகன் பாய்ச்சல்!
பாட்னா: "என் தம்பி தலைமை பிடிக்காவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுங்கள்," என்று லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் ஆவேசமாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு பீகாரில் பெரிய அடி விழுந்துள்ளது. இதுவரை இல்லாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருவதால், அவரது இளைய மகன் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தேர்தலை சந்தித்தது.

ஆனால், தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி பாஜகவிடம் மண்ணை கவ்வி உள்ளது. இந்த நிலையில், தேஜஸ்விக்கு எதிராக அக்கட்சியில் கலகக் குரல் எழுந்துள்ளது. அவரது கட்சியின் எம்எல்ஏ மகேஷ்வர் பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் தேஜஸ்விக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மகேஷ்வர் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
யாதவர் சமூகத்தை சாராத மூத்த தலைவர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், வரும் 2020ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நிச்சயம் படு தோல்வியை சந்திக்கும்," என்று கூறி இருக்கிறார். மகேஷ்வர் பிரசாத் யாதவின் கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தனது தம்பி தேஜஸ்விக்கு எதிராக கட்சியினர் போர்க்கொடி தூக்கி இருப்பதை கண்டு கொந்தளித்துவிட்டார் அவரது சகோதரர் தேஜ் பிரதாப். அவர் கூறுகையில்,"எதற்காக அவர் (தேஜஸ்வி) எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்? தேஜஸ்வி பிரசாத் யாதவின் தலைமை பிடிக்காதவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்று காட்டமாக பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து கேட்கப்பட்டதற்கு," அது முடிந்தபோன கதை. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் முழு கவனத்தையும் நாம் செலுத்த வேண்டும். என் தம்பிக்கு கிருஷ்ணர் போல நான் உடன் இருப்பேன்," என்று கூறி இருக்கிறார். தம்பிக்கு ஆதரவாக தேஜ் பிரதாப் வரிந்து கட்டியிருப்பதால், தேர்தலுக்கு பின்னரும் பீகார் அரசியலில் அனல் பறக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications