பீகாரில் சட்டென மாறிய அரசியல் வானிலை.. நிதிஷ்குமாருடன் கை கோர்க்க லாலு கட்சி ரெடி!
பாட்னா: பாஜகவால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் மெகா கூட்டணியை மீண்டும் அமைக்க லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள் விருப்பம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது ராஷ்டிரிய ஜனதா தள்.

இன்னொருபுறம் பாஜக- ஐக்கிய ஜனதா தள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தள் 2 இடங்களைக் கேட்டது. பாஜகவோ ஒரு இடம்தான் என திட்டவட்டமாக கூறியது.
இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராக திரும்பி வருகிறார். இதன் முதல் கட்டமாக பீகாரில் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி; மற்ற மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்திருக்கிறார். இந்நிலையில் பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும்; நிதிஷ்குமார் இதற்கு தலைமை ஏற்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாந்த் சிங் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தார். மேலும் அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரியும், பாஜகவால் நிதிஷ்குமார் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நிதிஷ்குமாருக்கு கிடைத்திருக்கிறது என அழைப்பு விடுத்திருக்கிறார்.
இப்படி ராஷ்டிரிய ஜனதா தள் கட்சி தமது ஈகோவை விட்டு கொடுத்து இறங்கி வந்திருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய ஜனதா தள் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் மமதாவின் தேர்தல் கள ஆலோசகராகி இருக்கிறார்.
தற்போது ராஷ்டிரிய ஜனதா தள் இருகரம் கூப்பி நிதிஷை அழைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தள் கூட்டணி நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications