ரோகித் வெமுலாதான் எனக்கு முன் உதாரணம் - ஜேஎன்யு மாணவர் கன்யா குமார்
டெல்லி: ரோகித் வெமுலா தான் தனக்கு முன் உதாரணம் என்று தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ. பல்கலை வளாகத்தில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக அந்த பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் திகார் சிறையில் இருந்து கன்யா குமார் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நான் அரசியல்வாதி அல்ல, மாணவன். தேசிய அரசியலில் இணையும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ இல்லை. ஒரு மாணவனாக கேள்வி கேட்கவும், எதிர்காலத்தில் ஓர் ஆசிரியனாக பதிலளிக்கவும் விரும்புகிறேன்.
நாட்டு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, பல்கலைக்கழக மாணவர்கள்தான் வாக்களித்தனர். நான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர். நான் மாணவர்களைப் பற்றியும், அவர்களுக்காகவும் மட்டுமே பேசுவேன்.
என்னைப் பொறுத்தவரையில் சட்டப்படி தண்டிக்கப்பட்ட அப்சல் குரு இந்நாட்டின் குடிமகன். அளிக்கப்பட்ட தண்டனை சரியா, தவறா என யார் வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கு சட்டம் அனுமதிக்கிறது. அப்சல் குரு எனது வழிபாட்டுக்கு உரியவர் அல்ல. ரோகித் வெமுலாதான் எனக்கு முன் உதாரணம் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications