66 கோடி சொத்துக் குவிப்பில் உள்ளே போன சசிகலா வெளியே வரும் போது கையில் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
ரூ. 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குள் போயுள்ள சசிகலா, விடுதலையாகி வரும்போது அவரிடம் ரூ. 65,700 சம்பளப் பணம் இருக்கும்.
பெங்களூரு: ரூ. 66.5 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குள் போயுள்ள சசிகலா விடுதலையாகி வெளியே வரும் போது அவரது கையில் ரூ. 65,700 இருக்குமாம். அதாவது சிறையில் இருக்கும் காலத்தில் அவர் பார்க்கப் போகும் வேலைக்கான ஊதியம் இது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருடன் அவரது அண்ணி இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார். 3.6 வருடங்கள் இவர்கள் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இடையில் பரோல் கேட்டு வெளியே வரலாம்.
சிறையில் தண்டனை பெற்ற கைதிகள் ஏதாவது வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் சசிகலா, இளவரசியும் வேலை பார்க்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஊதியமும் உண்டு. தினசரி அவர்களுக்கு ரூ. 50 கூலியாக கிடைக்கும்.

சீருடையில் சசிகலா
தண்டனைக் கைதிகளுக்கு பெங்களூரு சிறையில் சீருடை உண்டு. பெண்கள் நீல நிற சேலை அணிந்து இருக்க வேண்டும். அதன்படி நேற்று சசிகலா, இளவரசிக்கு நீல நிற சேலையும், தட்டு, டம்பளர் ஆகியவையும் கொடுக்கப்பட்டு விட்டது.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலை
சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு தினசரி ரூ. 50 சம்பளமாக தரப்படும். இந்தப் பணத்தை உடனடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்து போகும்போதுதான் அவருக்கு இந்த கூலி கையில் மொத்தமாக கிடைக்கும்.

ரூ. 65,700
தினசரி கூலி ரூ. 50 என்று வைத்துக் கொண்டால், தண்டனைக் காலத்தை சசிகலா முழுமையாக அனுபவிக்கிறார் என்றால், அவர் தண்டனை முடிந்து வெளியே வரும்போது அவரது கையில் அவர் மெழுகுவர்த்தி தயாரித்து சம்பாதித்த கூலி ரூ. 65,700 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை கட்டாயமில்லையாம்
இதற்கிடையே, விஐபி கைதிகளுக்கு சிறையில் கண்டிப்பாக வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதை சிறை நி்ர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications