மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள்..பசுக்களை தத்தெடுத்துங்கள்.. மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ்
இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட்டு, பசுமாடுகளைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு,பசு மாடுகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மாட்டிறைச்சி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதனால் பல இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் ஆர்எஸ்எஸ் இந்த விவாதத்தைக் கையெடுத்துள்ளது ஆபத்தானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நாட்டு வளர்ச்சிக்கு நிறைய செயல்படவேண்டிய நேரங்களில் இதுபோன்ற விஷயங்களில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மத இணக்கமும் தேச ஒற்றுமையையும் உள்ள நாட்டில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதுபோல பேசுவதுதான் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமைந்துவிடுகிறது என்றும் கூறும் சமூக ஆர்வலர்கள், 'வேற்றுமையில் ஒற்றுமை'என்பதைக் கடைபிடிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மாட்டிறைச்சித் தொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள இந்திரேஷ் குமார். ''இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்கூட, மாட்டிறைச்சி அதிகம் உண்ணப்படவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் பலரும் பசுக்களைப் புனிதமாக வழிபட்டுள்ளனர்,'' எனக் கூறினார்.
மேலும் இந்திரேஷ் குமார் , ''தற்போது பலர் மாட்டிறைச்சி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் வேதனை தருகிறது. இந்த வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என்றார். அத்துடன் குறிப்பாக இஸ்லாமிய மக்கள், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக பசு மாடுகளை தத்தெடுத்து, அவர்கள் வளர்த்தார்கள் எனில், அவர்களை யாரும் தாக்கமாட்டார்கள். மாடுகளின் மீது இஸ்லாமிய மக்கள், பரிவும், பாசமும் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால், அது இந்தியாவில் மிகப்பெரிய கலாசார புரட்சியாக அமையும்,'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications