மோடி அரசின் பங்காளி ஆர்.எஸ்.எஸ்.: பிருந்தா காரத் தாக்கு
ஜெய்பூர்: நரேந்திர மோடி ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பங்காளியாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஆட்சியின் பங்காளியாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. மோடி அரசின் கொள்கைகளில் ஆர்.எஸ்.எஸ். தலையை நுழைப்பதால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். மோடி மற்றும் பாஜகவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்து அரசு துறைகளிலும் தலையிடுவதுடன், அதன் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
நம் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மக்கள் இதற்காக ஒன்றும் மோடிக்கு வாக்களிக்கவில்லை. முன்னேற்றத்தை கொண்டு வருவார் மோடி என்று நம்பி வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
தொழிலாளர்கள், விவசாயிகள் தாக்கப்படுகிறார்கள். யாரை முன்னேற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னேற்றம் என்பது கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மக்கள் கார்பரேட்டுக்காக மோடிக்கு வாக்களிக்கவில்லையே என்றார்.












Click it and Unblock the Notifications