ஹோமோசெக்ஸ் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு திடீர் மாற்றம்
மும்பை: ஹோமோசெக்ஸ் கிரிமினல் நடவடிக்கையா இல்லையா என்பது விவாதத்துக்குறியது என்று ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். ஹோமோசெக்சுக்கு எதிராக இருந்த கடும் நிலைப்பாட்டில் இருந்து, ஆர்எஸ்எஸ் தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது இதன் மூலம் தெரிகிறது.
பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் ராம் மாதவ் கூறுகையில், இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவில் ஹோமோ செக்ஸ் தண்டனைக்குறிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது விவாதத்துக்குறியது. அதே நேரம் குற்றச்செயல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள செயல்களை நான் உயர்த்திபேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கொள்கை முடிவுகளில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஹோமோசெக்ஸ்சுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் தளர்த்தியுள்ளது, ஹோமோசெக்ஸ் ஆதரவாளர்களை நிம்மதி பெருமூச்சுவிட செய்துள்ளது. இதுபற்றி சம உரிமைகளுக்கான போராட்ட குழுவை சேர்ந்த ஹரீஷ் ஐயர் கூறுகையில், "சரியான வழியில் அனைத்தும் சென்று கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு நம்பிக்கை தந்துள்ளது" என்றார்.
ஹோமோசெக்ஸ் குற்றச்செயல் இல்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்ததும், அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஹோமோசெக்ஸ் குற்றச்செயல்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் நினைவுகூறத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications