மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தொடர்பே இல்லை: சொல்வது எல்.கே.அத்வானி
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலையில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்து தொடர்பு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
எல்.கே.தமது இணைய ப்ளாக்கில், மகாத்மா காந்தி படுகொலையின் போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது எப்படியெல்லாம் காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது என்பதை காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தமது புத்தகத்தில் விவரித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த புத்தகத்தில் சர்தார் படேல், ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கொலை சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் தொடர்பு இல்லை என எழுதப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்கிறார்
இதேபோல் ராஜ்மோகன் காந்தியின் புத்தகத்தை தமது கட்டுரையில் பல இடங்களில் மேற்கோள்காட்டி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் காந்தி படுகொலைக்குமே தொடர்பு இல்லை என்று அத்வானி பதிவு செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications