சபரிமலை விமான நிலைய திட்டம்... ஆலோசனை வழங்க சர்வதேச நிறுவனத்துக்கு ஒப்புதல்!

சபரிமலையில் விமான நிலைய கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்க அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டுவதற்காக தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்க சர்வதேச நிறுவனமான அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ளது. இங்கு நவம்பர் மற்றும் ஜனவரி இடையே 3 மாத இடைவெளியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Sabarimala airport: Louis Berger appointed as consultant

அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விமான நிலையம் அமைக்க நீண்ட நாள்களாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி ஐயப்பன் கோயிலிருந்து 48 கி.மீ.தூரத்தில் உள்ள சேருவல்லி எஸ்டேட் பகுதியில் 2,263 ஏக்கரில் பசுமை விமான நிலையம் கட்ட மாநில அரசு கடந்த 2016-இல் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் விமான நிலையத்தை கட்ட தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், நிதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கவும் சர்வதேச நிறுவனமான லூயிஸ் பெர்கருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்தான முடிவை இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், இன்னும் 9 மாதங்களுக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+