பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மார்ச் 14-ல் திறப்பு
பம்பை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்பட உள்ளது. மார்ச் 19-ந் தேதி ஐயப்பன் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா தொடங்க உள்ளது.
மகர ஜோதிக்குப் பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் பிப்.17-ல் நடை சாத்தப்பட்டது.

இதையடுத்து பங்குனி மாத பூஜைக்காக வரும் 14-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 19-ல் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்கும்.
இதன் ஒருபகுதியாக மார்ச் 27-ல் சரம்குத்தியில் பள்ளிவேட்டை, 28-ந் தேதியில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இதனையடுத்து மார்ச் 28-ந் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனத்துடன் நடை சாத்தப்படும்.
இந்த நாட்களில் நாள்தோறும் 5,000 பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு செல்ல முடியும். சபரிமலைக்கு செல்வோர் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications