ராஜஸ்தான் சட்டசபை...இடம் மாற்றம்...சச்சினின் துணிச்சல் வீரர் பேச்சு!!.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் இருக்கை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்ட சச்சின் பேசுகையில், ''துணிச்சலான வீரர்கள்தான் எல்லையில் போரிடுவதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆதலால்தான் எனது இருக்கையும் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவிய அரசியல் மோதல் முடிவுக்கு வந்து இன்று சட்டசபை கூடியது. தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை அவைக்கு சச்சின் வந்தார். துணை முதல்வராக இருந்ததால், அவருக்கு முதல்வரின் இருக்கை அருகே இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், தற்போது அவர் துணை முதல்வராக இல்லை.

இன்று காலை சட்டசபையில் சட்ட அமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை ஆதரித்து, சச்சின் பேசினார். ஆப்போது, ''இன்று காலை 10.45 மணிக்கு அவைக்குள் வந்தேன். அப்போது என்னுடைய இடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முன்பு முதல் வரிசையில் பாதுகாப்பாக, அரசின் ஒரு அங்கமாக அமர்ந்து இருந்தேன். ஆனால், ஏன் தற்போது சபாநாயகரும், கொறடாவும் என்னுடைய இருக்கையை மாற்றினார்கள் என்று சில நிமிடங்கள் யோசித்தேன்.
பின்னர்தான் எனக்கு தோன்றியது, ஓ... இது எதிர்க்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் எல்லையாக இருக்கும் பகுதி என்று. யாரை எல்லைக்கு அனுப்புவார்கள். துணிச்சலான வீரர்களைத்தான் எல்லைக்கு அனுப்புவார்கள். எங்களது கவலைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவரிடம் நாங்கள் சென்றோம். சிகிச்சை கிடைத்த பின்னர் நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக கூடி இருக்கிறோம். இங்கு என்ன போர் நடந்தாலும், அதை எதிர்த்து போரிட தயாராக இருக்கிறேன்'' என்றார்.

இன்று கூடிய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், ஆட்சி அமைக்க 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 101 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. அப்படி கொண்டு வந்து தோற்கடிக்கப்பட்டால் மீண்டும் ஆறு மாதங்களுக்கு அசோக் கெலாட் அரசுக்கு பாஜக அப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வர முடியாது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications