சச்சினுக்கு பிப்.4ல் பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வழங்குகிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை பிப்ரவரி 4ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை மத்திய அரசு அவருக்கு அறிவித்து கவுரப்படுத்தியது.

இந்நிலையில், சச்சினுக்கு பாரத ரத்னா விருது முறைப்படி ராஷ்டிரிய பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரதரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications