யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது: சசி தரூர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டது வருத்தம் அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் யாகூப் தூக்கிலிடப்பட்டதை அறிந்து முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வருத்தம் அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வருத்தம்

வருத்தம்

ஒரு மனிதரை நம் அரசு தூக்கிலிட்டுள்ளது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. மாநில அரசு ஆதரவுடன் நடக்கும் கொலை நம்மையும் கொலைகாரர்களாக ஆக்கியுள்ளது.

தூக்கு

தூக்கு

மரண தண்டனை எதையும் தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. எதிர்மாறாக தான் நடக்கும், அது தான் உண்மை. பழிவாங்கும் எண்ணம் தான் இருக்கும், இது அரசுக்கு தேவை இல்லாதது.

தண்டனை

தண்டனை

நாம் நிச்சயம் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும். ஆனால் மரண தண்டனை எந்த இடத்திலும் தீவிரவாத தாக்குதலை எப்பொழுதுமே தடுத்து நிறுத்தியது இல்லை.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நான் எந்த வழக்குப் பற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை. அதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மரண தண்டனை கொள்கை மற்றும் நடைமுறையில் இருப்பது தான் பிரச்சனை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+