சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது- தமிழில் கெளரி கிருபானந்தன் பெறுகிறார்
டெல்லி: சாகித்ய அகாடமி சார்பில் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளார்களுக்கான விருதுகள் பட்டியலில் தமிழ் மொழி சார்பாக விருதுக்கு கெளரி கிருபானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகள் மொத்தம் 23 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சாகித்ய அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதி பட்டியலுக்கு அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் ஒப்புதல் அளித்தார்.
ஒவ்வொரு மொழியை சேர்ந்த 3 தேர்வுக் குழுவினர் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று சாகித்ய அகாடமி சார்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் இவருக்குதான்:
இந்த பட்டியலில் தமிழ் மொழியில் கௌரி கிருபானந்தனுக்கு அவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கெளரி கிருபானந்தன் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் எட்டனப்புடி சுலோச்சனா ராணி உள்ளிட்டோரின் 60க்கும் மேற்பட்ட படைப்புகளை கிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார்.
விருதும், பணமும்:
வெற்றி பெற்றவர்களுக்கு விருதும், ரூபாய் 50 ஆயிரம் பரிசுப் பணமும் வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய படைப்பாளிகளுக்கான விருது:
சாகித்திய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். இவ்விருதில் பரிசுத்தொகையும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
24 இந்திய மொழிகள்:
24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications