கேரளாவில் 18 வயது தடகள வீரர் கை நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா(சாய்) அதாவது இந்திய விளையாட்டு ஆணைய வீரர் ஒரு தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா(சாய்) அதாவது இந்திய விளையாட்டு ஆணைய வீரர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விலங்க பயிற்சி எடுத்து வந்தார். 18 வயதாகும் அந்த வீரர் சாய் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை 6.15 மணிக்கு தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

SAI athlete attempts suicide in Kerala

உடனே அவர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாய் விடுதியில் திருட்டு நடந்துள்ளது. அது தொடர்பாக விடுதி மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கேரளாவில் கடந்த மாதம் சாய் வீராங்கனைகள் 4 பேர் விஷ பழத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 15 வயது வீராங்கனை ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+