இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்!
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரியாக சலில் பாரேக் நேற்று பதவியேற்றார்.
பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார் சலில் பரோக்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 36 வருடங்களாக இந்திய மென்பொருள் துறையில் ஜாம்பவானாக இயங்கி வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பணியாற்றி வந்தார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி விஷால் சிக்கா மீது தொடர்ந்து நிர்வாக குற்றச்சாட்டுகளை வைத்ததை அடுத்து விஷால் சிக்கா அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்நிறுவனத்திற்கான தலைமை செயல் அதிகாரி பணிக்கு சரியான ஆளை தேடும் சவால் நிர்வாக குழுவிற்கு எழுந்தது.
இந்நிலையில், சலில் பாரேக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. 53 வயதான சலில் ஐ.ஐ.டி.,யில் விமானப் பொறியியல் படித்து, கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
கடந்த 2000ம் ஆண்டு கேப்ஜெமினியில் முழு நேர ஊழியனாக பணியேற்ற அவர், அந்நிறுவனத்தின் கிளவுண்ட் கம்யூட்டிங் துறையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக்கொடுத்தார். சுமார் 17 வருடங்களான அந்நிறுவனத்தில் பணியாற்றிய அவருக்கு இன்போசிஸ் நிறுவனம் அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும், நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் சலில் பாரேக் ஏற்றுக்கொண்டு உள்ளார். இவரை நேற்று நடந்த விழாவில், ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் நந்தன் நீல்கேனி.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய அனுபவம், இந்திய மென்பொருள் துறை பற்றிய தெளிவு, வாடிக்கையாளர்களின் தேவை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நிச்சயம் சலில் சிறப்பாக செயல்படுவார் என்று நந்தன் நீல்கேனி தெரிவித்து உள்ளார்.
விழாவில் பேசிய சலில் பாரேக், ஐ.டி பணியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அந்த ஆர்வம் தான் அவர்களை இந்த துறையில் நிலைத்து செயல்பட வைக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications