சல்மான் கான் கார் விபத்து: பைல் எல்லாம் தீயில் கருகிப்போச்சு… மராட்டிய அரசின் அசால்ட் பதில்
மும்பை: நடிகர் சல்மான் கானின் கார் மோதி நடைபாதையில் உறங்கியவர் இறந்த வழக்கு தொடர்பான பைல்கள் தீயில் எறிந்து நாசம் அடைந்து விட்டதாக மகாராஷ்டிர அரசு அதிர்ச்சிகரமான தகவல் அளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28 ம் தேதி அன்று, நடிகர் சல்மான் கான் மது போதையில் தனது காரை மிகவேகமாக ஓட்டிச் சென்றதில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் மீது ஏறியது. இதில், ஒருவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து, மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த வழக்கின் இறுதியில் கடந்த மே 6ஆமு தேதி நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. ஆனால், கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
'சல்மான் கான் கார் மோதி, ஒருவர் இறந்த வழக்கு தொடர்பான பைல்களை தர வேண்டும்' எனக்கோரி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் மன்சூர் தர்வேஷ் என்பவர், மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன், சல்மான் கான் வழக்கிற்காக, மாநில அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், சொலிசிட்டர்கள், சட்ட ஆலோசகர்கள், அரசு வழக்கறிஞர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என, கேட்டிருந்தார்.

தீயில் எரிஞ்சு போச்சே
இதற்கு, மகாராஷ்டிர அரசு அளித்துள்ள பதில்: மகாராஷ்டிர தலைமைச் செயலகமான மந்திராலயாவில், 2012 ஜூன் 21ம் தேதி, ஏற்பட்ட தீ விபத்தில், சல்மான் கான் தொடர்பான பைல்கள் எல்லாம் அழிந்து விட்டதாக கூறியுள்ளது.

வக்கீல் சம்பளம்
சல்மான் வழக்கில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, நாள் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, மகாராஷ்டிர அரசு தெரிவித்து உள்ளது.

எதுவும் நடக்கலை
அழிந்து போன ஆவணங்களை புதிதாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு கூறியது. ஆனால் எத்தனையோ நாளாகிவிட்டது. இன்னமும் அதற்கான முதற்கட்ட பணிகளைக் கூட தொடங்கவில்லை மராட்டிய அரசு என்றும் சமூக ஆர்வலர் கூறியுள்ளார்.

அசால்ட் பதில்
மிக முக்கியமான வழக்கின் ஆவணங்களைக் கூட பாதுகாக்க முடியாமல் தீயில் கருகிவிட்டதாக அசால்டாக பதிலளித்துள்ளது மகாராஷ்ரா அரசு. இந்த பதில் சமூக ஆர்வலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications