பாலியல் பலாத்காரப் பேச்சு: நேரில் ஆஜராகுமாறு சல்மானுக்கு மகளிர் ஆணையம் சம்மன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்ந்தேன் என்று பேசிய சல்மானுக்கு, மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது.

ஏதாவது ஒரு செயலுக்கு கருத்துத் தெரிவிக்கப் போய் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது சல்மான் கானின் வழக்கம். சமீபத்தில் தான் நடித்திருக்கும் சுல்தான் படம் குறித்து சல்மான் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் ''மல்யுத்த வீரராக நடிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். தினமும் மல்யுத்தக் காட்சிகளில் நடித்து வீடு திரும்பும்போது நேராக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன்.

Salman Khan Gets Summon Maharashtra Women's Commission

இதனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்கிறேன்'' என்று கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

சல்மான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் சார்பில் 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சல்மானின் தந்தை மன்னிப்புக் கேட்டாரே தவிர சல்மான் இந்த விவகாரத்தில் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிர மகளிர் ஆணையம் வரும் ஜூன் 29 ம் தேதி மதியம் 2 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சல்மானுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+