மான் வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு… சல்மானுக்கு 6 ஆண்டு சிறை கிடைக்கலாம்
மான் வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
ஜோத்புர்: 1998ல் நடந்த பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.
பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர், ராஜஸ்தானில் 1998ல் ஹிந்தி பட சூட்டிங்கில் இருந்தனர். அப்போது அங்குள்ள வனப் பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளனர்.

இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக, நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சல்மான் விடுதலை செய்யப்பட்டார்.
மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் ஜோத்புர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி அதிகபட்சம், 6 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம் என தெரிகிறது












Click it and Unblock the Notifications