யாகூப் மேமனை பற்றி என் மகன் கூறியவை அர்த்தமற்றவை: சல்மான் தந்தை சலீம் கான்
மும்பை: யாகூப் மேமன் பற்றி சல்மான் கான் தெரிவித்ததில் அர்த்தம் இல்லை என்று அவரது தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் டைகர் மேமனை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள். அவருக்காக அவரது சகோதரர் யாகூப் மேமனை தூக்கிலிட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் கூறுகையில்,
யாகூப் மேமன் பற்றி சல்மான் கான் கூறியது அனைத்தும் அர்த்தம் இல்லாதது, கேலிக்கூத்தானது. விவகாரம் பற்றி தெரியாமல் சல்மான் பேசியுள்ளார். அவர் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
டைகர் மேமன் ஒன்றும் டைகர் இல்லை அவர் ஒரு பூனை. பூனையை பிடிக்க நம்மால் முடியவில்லை என்று சல்மான் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications