மத்தியில் மூன்றாவது அணி அரசு அமைக்க முலாயம்சிங் மும்முரம்
டெல்லி: மத்தியில் மூன்றாவது அணி அரசு அமைக்க முலாயம்சிங் டெல்லியில் முகாமிட்டு ஆதரவு திரட்டி வருவதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகள் ஒருபக்கம் இருக்க இவற்றை நம்ப முடியாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.

மத்தியில் அரசு அமைக்க மதச்சார்பற்ற கட்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி மூன்றாவது அணி அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான நரேஷ் அகர்வால் கூறுகையில், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், 14-ந் தேதியில் இருந்து டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் எங்கள் கட்சியின் இதர தலைவர்களுடன் இணைந்து, மற்ற மதச்சார்பற்ற கட்சிகளை தொடர்பு கொண்டு வருகிறார்.
மத்தியில், மூன்றாவது அணி அரசை அமைப்பதற்காக அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சி முக்கிய பங்கு வகிக்கும். பாரதிய ஜனதாவின் மாயத்தோற்றம் நொறுங்கி விடும். மூன்றாவது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம் என்றார்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications