மகளுக்கு அறுவை சிகிச்சை- மீண்டும் 30 நாள் பரோலில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத்
மும்பை: மும்பையில் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் மகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மீண்டும் பரோலில் வெளிவந்துள்ளார்.
நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவரது மனைவி உடல் நலம் இன்றி இருந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரோலில் விடுதலையானார். 2014 மார்ச் வரை அவருக்கு 3 முறை பரோல் நீடிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சஞ்சய்தத் மகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் தனக்கு மீண்டும் 30 நாள் பரோல் கேட்டு இருந்தார். இதற்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து சஞ்சய்தத் இன்று எரவாடா சிறையில் இருந்து பரோலில் விடுதலையானார். நேராக மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்று மகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார்.












Click it and Unblock the Notifications