நட்பு போட்ட வேலி: 19 நாட்களாக கணவர் நடராஜனை பார்க்க முடியாமல் தவிக்கும் சசிகலா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சிறையில் அடைக்கப்பட்டு 19 நாட்களாகியும் சசிகலாவை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார் அவரது கணவன் நடராஜன்.

சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுடன் சேர்த்து 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. கடந்த மாதம் 27ம்தேதி முதல் பெங்களூர் சிறையில் இவரும் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா சிறைச்சாலையில் யாரையும் சந்திப்பது இல்லை என்பதால், அவருக்கு பதிலாக சசிகலா சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசி அனுப்பி வருகிறார்.

Sasikala couldn't meet her husband Natarajan

இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் அவரின் தம்பி ராமச்சந்திரன் ஆகியோர் பெங்களூரிலேயே தங்கியிருந்து சசிகலாவை சந்திக்க முயன்றும் இதுவரை அவரை சந்திக்க முடியவில்லையாம்.

சிறையில் தான் யாரை சந்திக்கப்போகிறேன் என்பதை ஜெயலலிதாவிடம் கூறிவிட்டு அவர் அனுமதித்தால் மட்டுமே சசிகலா யாரையும் சந்திக்கிறார். நடராஜனை பார்க்க ஜெயலலிதா அனுமதி மறுப்பார் என்பதால், சசிகலாவும், கணவரும் சந்திக்க முடியாமல் உள்ளதாம்.

இதனிடையே, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலையாக வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜை செய்துள்ளனர் சசிகலாவின் உறவினர்களான ராவணனும் அவரது மகனும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+