15 நாட்கள் லீவ் கேட்டு சசிகலா பெங்களூரு சிறையில் மீண்டும் மனுத்தாக்கல்!
சசிகலாவுக்கு நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு: நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நேற்று நிராகரித்தது.

சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது
நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்
கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து தசரா விடுமுறைக்குப் பிறகு சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று நிராகரித்தனர். கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்ள சசிகலாவின் விண்ணப்பத்தில், கணவர் நடராஜனின் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் லீவுக்க தேவையான கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 15 நாட்கள் லீவ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.
மனுவில் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் அனுமதி பெற்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்குள் சசிகலாவுக்கு லீவ் கிடைக்காவிட்டால் மேலும் 2 நாட்கள் தாமதமாகும். கர்நாடகாவில் நாளை வால்மிகி தின விடுமுறை என்பதால் சசிகலாவுக்கு இன்று அனுமதி கிடைத்தாக வேண்டும் இல்லையெனில் மேலும் நாட்கள் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications