15 நாட்கள் லீவ் கேட்டு சசிகலா பெங்களூரு சிறையில் மீண்டும் மனுத்தாக்கல்!
சசிகலாவுக்கு நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு: நேற்று பரோல் மறுக்கப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட கூடுதல் ஆவணங்களை சேர்த்து கர்நாடக சிறையில் சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நேற்று நிராகரித்தது.

சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது
நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில்
கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து தசரா விடுமுறைக்குப் பிறகு சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று நிராகரித்தனர். கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்ள சசிகலாவின் விண்ணப்பத்தில், கணவர் நடராஜனின் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் லீவுக்க தேவையான கூடுதல் ஆவணங்களை சேர்த்து சசிகலா புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 15 நாட்கள் லீவ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார்.
மனுவில் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் அனுமதி பெற்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்குள் சசிகலாவுக்கு லீவ் கிடைக்காவிட்டால் மேலும் 2 நாட்கள் தாமதமாகும். கர்நாடகாவில் நாளை வால்மிகி தின விடுமுறை என்பதால் சசிகலாவுக்கு இன்று அனுமதி கிடைத்தாக வேண்டும் இல்லையெனில் மேலும் நாட்கள் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications