பரப்பன அக்ரஹார சிறையில் பிரத்யங்கிரா தேவியை வழிபடும் சசிகலா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது,
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கே மனஅமைதிக்காகவும், எதிரிகளை வெல்லவும் பிரத்தியங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டணை, ரூ. 10 கோடி அபராதம் பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்கரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவர் கேட்ட வசதிகள் கிடைக்கவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம். தன்னை பார்க்க வரும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களிடம் பேசும் பேச்சிலேயே அது வெளிப்படுகிறதாம்.

ஒருமாத சிறைவாசம்
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. சிறையில் சரியான வசதியில்லை, கொசுக்கடியால் இரவில் தூக்கமின்றி தவிக்கிறாராம். பகலிலும் உறக்கம் வரவில்லையாம்.

சிறை உணவுதான்
பெங்களூரு சிறையில் கொடுக்கப்படும் ராகி களி, புளியோதரை, சப்பாத்தி, சாம்பார்தான் சசிகலாவிற்கு கொடுக்கிறார்கள். வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்து விட்டனர். இதனால் இளைத்து போய்விட்டாராம் சசிகலா.

அமைச்சர்களிடம் புலம்பல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னை காண வந்த அமைச்சர்களிடம் புலம்பு தீர்த்து விட்டாராம் சசிகலா. டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றியும் பேசினாராம் சசிகலா. முன்னாள் அமைச்சர்கள் பலரும் இப்போது சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்களாம்.

பிரத்தியங்கிரா தேவி பூஜை
சிறையில் சசிகலா அவ்வப்போது பூஜை செய்கிறாராம். பிரத்யங்கிரா தேவியை வழிபடுகிறாராம் சசிகலா. இதன்மூலம் எதிரிகளை வெல்லலாம், நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீரும் என்பது சசிகலாவின் நம்பிக்கை. சென்னையில் இருந்த போது அமாவாசை, பவுர்ணமி பூஜைகளில் சசிகலா பங்கேற்பார். இப்போது சிறையில் இருப்பதால் பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை மட்டுமே கூறி பூஜை செய்து வருகிறாராம் சசிகலா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications