பரப்பன அக்ரஹார சிறையில் பிரத்யங்கிரா தேவியை வழிபடும் சசிகலா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது,
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கிற்காக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கே மனஅமைதிக்காகவும், எதிரிகளை வெல்லவும் பிரத்தியங்கிரா தேவி மந்திரத்தை கூறி வழிபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டணை, ரூ. 10 கோடி அபராதம் பெற்றுள்ள சசிகலா கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பெங்கரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவர் கேட்ட வசதிகள் கிடைக்கவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம். தன்னை பார்க்க வரும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களிடம் பேசும் பேச்சிலேயே அது வெளிப்படுகிறதாம்.

ஒருமாத சிறைவாசம்
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. சிறையில் சரியான வசதியில்லை, கொசுக்கடியால் இரவில் தூக்கமின்றி தவிக்கிறாராம். பகலிலும் உறக்கம் வரவில்லையாம்.

சிறை உணவுதான்
பெங்களூரு சிறையில் கொடுக்கப்படும் ராகி களி, புளியோதரை, சப்பாத்தி, சாம்பார்தான் சசிகலாவிற்கு கொடுக்கிறார்கள். வீட்டு உணவு, மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்து விட்டனர். இதனால் இளைத்து போய்விட்டாராம் சசிகலா.

அமைச்சர்களிடம் புலம்பல்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னை காண வந்த அமைச்சர்களிடம் புலம்பு தீர்த்து விட்டாராம் சசிகலா. டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றியும் பேசினாராம் சசிகலா. முன்னாள் அமைச்சர்கள் பலரும் இப்போது சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்களாம்.

பிரத்தியங்கிரா தேவி பூஜை
சிறையில் சசிகலா அவ்வப்போது பூஜை செய்கிறாராம். பிரத்யங்கிரா தேவியை வழிபடுகிறாராம் சசிகலா. இதன்மூலம் எதிரிகளை வெல்லலாம், நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீரும் என்பது சசிகலாவின் நம்பிக்கை. சென்னையில் இருந்த போது அமாவாசை, பவுர்ணமி பூஜைகளில் சசிகலா பங்கேற்பார். இப்போது சிறையில் இருப்பதால் பிரத்யங்கிரா தேவி மந்திரத்தை மட்டுமே கூறி பூஜை செய்து வருகிறாராம் சசிகலா.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications