ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி உள்துறை அமைச்சரிடம் சசிகலா புஷ்பா எம்.பி., மனு

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனு அளி்ததுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளி்த்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.

Sasikala puspha MP meets Home minister Rajnath Singh

இருப்பினும் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். ஏற்கெனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் சசிகலா புஷ்பா மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+