எங்கள் அணி வேட்பாளர் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படுவார்.. டிடிவி தினகரன் தகவல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சசிகலா அணி சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் எனக் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தையே மீண்டும் கேட்போம் என்றும் அவர் கூறினார்.
வாழ்க்கையை அர்ப்பணித்த சசி
ஜெயலலிதாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.
நிச்சயம் வெற்றி பெறுவோம்
இரட்டை இலைச்சின்னம் தொடர்பான தீர்ப்பு தற்காலிகமானது என்றும் அவர் கூறினார். இதனை எதிர்த்து தொடரப்படும் மேல்முறையீட்டு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவுடன் தான் போட்டி
ஆர்கே நகர் தேர்தலில் மக்கள் தங்களுக்கு நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள் என்றார். மேலும் ஆர்கே நகரில் தங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்றும் அவர் கூறினார்.
பலர் வெற்றி பெற்றுள்ளனர்
துரோகிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இரட்டை இலைச்சின்னத்தை நிச்சயம் மீட்போம் என்றும் தினகரன் தெரிவித்தார். இரட்டை இலையை ஏதிர்த்து ஏற்கனவே பலர் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.