For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரு சிறையில் ஜெயலலிதாவின் பச்சைக்கலர் புடவை... - சசி சென்டிமெண்ட்

ஜெயலலிதாவின் புடவை பெங்களூரு சிறைக்கு போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து அவர் அடிக்கடி ஆசையாக உடுத்தும் பச்சைக்கலர் புடவையை பெங்களூரு சிறைக்கு எடுத்துக்கொண்டு போயிருக்காராம் விவேக். ஜெயலலிதா நினைவாக அந்த புடவை வேண்டும் என்று சசிகலா கேட்டதாலேயே அதை கொண்டு போய் கொடுத்தாராம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா. கூடவே அவரது அண்ணன் மனைவி இளவரசியும் பேச்சுத்துணைக்கு இருக்கிறார்.

ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து தப்பி விட்டார். அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தனது சொத்து குவிப்பு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சிறைபறவை

சிறைபறவை

போயஸ்தோட்டத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த சசிகலா இப்போது சிறைபறவையாகி விட்டார். கொசுக்கடை, சாப்பாடும் சரியில்லை. கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பது வேறு நோயை தீவிரப்படுத்தி விட்டதாம்.

யாரும் வருவதில்லை

யாரும் வருவதில்லை

இப்போதெல்லாம் சசிகலா, இளவரசியை பார்க்க கட்சி நிர்வாகிகள் யாருமே போவதில்லையாம். அவர் மீது அதீத அனுதாபிகளாக இருக்கும் சில எம்எல்ஏக்கள் மட்டுமே எப்போதாவது சென்று வருகிறார்களாம்.

விவேக்

விவேக்

இளவரசியின் மகன் விவேக்தான் அடிக்கடி தனது அம்மாவை பார்க்க பெங்களூரு சிறைக்கு போகிறார். கூடவே அத்தை சசிகலாவையும் பார்த்து விட்டு வருகிறார். சமீபத்தில் விவேக் போன போது கட்சி, ஆட்சி நிலவரங்கள் பற்றி சசிகலா விவாதித்தாராம்.

அக்கா நினைவு

அக்கா நினைவு

அப்போது விவேக்கிடம் அக்கா நினைவாகவே இருக்கிறது, அவரது புடவையாவது கொண்டு வா, நான் என்னுடன் வைத்துக்கொள்கிறேன் என்று விவேக்கிடம் சொன்னாராம் சசிகலா, இதையடுத்து பச்சைக்கலர் புடவை ஒன்றை எடுத்துக்கொண்டு போனாராம்.

புடவையாவது சிறையில் இருக்கட்டும்

புடவையாவது சிறையில் இருக்கட்டும்

ஜெயலலிதாதான் சிறை தண்டனையில் இருந்து தப்பி விட்டார், அவரது புடவையாவது இருக்கட்டும் என்று நினைத்தாரோ சசிகலா, அதான் தன்னுடன் சிறையில் புடவையை வைத்துக்கொள்ளலாம் என்று எடுத்து வரச்சொல்லியிருப்பார் என்று மனதுக்குள் நினைக்கின்றனர் ஜெயலலிதாவின் அனுதாபிகள்.

English summary
Sources said Sasikala asked to Ilavarasi son Vivek, She want Jayalalithaa sari. Vivek has taken to Jayalalithaa's green sari from Poes Garden to Bangaluru prison to Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X