இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமனம் -தமிழகத்துக்கு விரைவில் புதிய தலைமை அதிகாரி
டெல்லி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சக்சேனா 1989-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டு வேளாண்மைத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
கடந்த ஆண்டு அவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக மத்திய தலைமை தேர்தல் ஆணையம் நியமித்தது. ஸ்ரீரங்கம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்களின்போது சந்தீப் சக்சேனாவின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார்கள் எழுப்பியிருந்தன.

மேலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து சந்தீப் சக்சேனா விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications