காவிரி மேலாண்மை வாரியம்.... இழுத்தடித்தே நினைத்ததை சாதித்த மத்திய அரசு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலேயே நினைத்ததை சாதித்திருக்கிறது மத்திய அரசு.
Recommended Video

டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமலேயே மத்திய பாஜக அரசு இழுத்தடித்தே நினைத்ததை சாதித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

6 வார காலம் முடிவடைந்த பின்னர் உச்சநீதிமன்றத்தில் சந்தேகம் கேட்டது மத்திய அரசு. உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கியது.
ஆனாலும் மே3-ந் தேதியன்றும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யவில்லை. கர்நாடகா தேர்தலுக்காக மேலும் அவகாசம் கேட்டது.
அப்போது மத்திய அரசை கண்டிப்பது போல் கண்டித்து மே 8-ந் தேதிக்குள் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இன்றும் காவிரி மேலாண்மை வாரிய வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
இப்போதும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டிக்காமல் மே 14-ந் தேதி வரை அவகாசம் கொடுத்திருக்கிறது. அதாவது மே 12-ந் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இப்படி ஒட்டுமொத்தமாக மத்திய அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசும் தமிழகத்தை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் கர்நாடகா சட்டசபை தேர்தல் ஆதாயத்துக்காக நினைத்ததை சாதித்து காட்டியிருக்கிறது.
தமிழகமும் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று என்பதை பற்றி கவலைப்பட மத்திய அரசு தயாராக இல்லை. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்துவோம் என்பதில் அப்படி ஒரு பிடிவாதம் காட்டி சாதித்திருக்கிறது மத்திய அரசு,












Click it and Unblock the Notifications