ரூ.20,000 கோடி சொத்துப் பத்திரங்களை செபியிடம் ஒப்படைக்க சஹாரா குழுமத்துக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று சஹாரா குழுமம் மோசடி செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களை 3 வாரங்களுக்குள் செபி அமைப்பிடம் சஹாரா குழுமம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
அத்துடன் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் உச்ச நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று பிறக்கப்பட்ட உத்தரவுக்கு எதிரான மனுவும் விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணை நவம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications