குழு வன்முறை.. அறிக்கையளிக்காத மாநிலங்கள்.. உச்சநீதிமன்றம் கெடு
டெல்லி: குழு வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 8 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை, உச்சநீதிமன்றத்தில், இரு வாரங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பசு கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்லி குழுவாக கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஜூலை மாதம், உச்சநீதிமன்றம் 12 அம்சங்கள் கொண்ட வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது. இந்த வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி அதுகுறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த முறை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 29 மாநிலங்களில் 9 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களில் 2 மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தன. இதையடுத்து, பிற மாநிலங்களும் அறிக்கை சமர்ப்பிக்காவிட்டால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 8 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசுகள், இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள் ஒருபக்கம், குழு வன்முறையை தவிர்ப்பது தொடர்பாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வரும் நிலையில், டெல்லி (காவல்துறை மத்திய அரசிடம் உள்ளது) அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றனர்.
இதையடுத்து 2 வாரங்களுக்குள் அறிக்கையளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications