கலவரத்தை ஒடுக்க பெல்லட் குண்டு கூடாது.. மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கலவரங்களின் போது பயன்படுத்தப்படும் பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்று வழியை வரும் 2 வாரங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
டெல்லி : வன்மூறை சம்பவங்களின்போது அவர்களை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினர் பெல்லட் என்ற கூரிய முனை கொண்ட குண்டுகளை பயன்படுத்துவதற்கு பதில் மாற்று வழி 2 வாரங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த ஜூன் மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் வானியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மாதங்கள் நீடித்த இந்த போராட்டங்களின்போது அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் மீது வானியின் ஆதரவாளர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
மோதல்
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றது. சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பலமுறை பெல்லட் ரக துப்பாக்கி
இந்த கலவரத்தின்போது பாதுகாப்பு படையினர் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர். இதனால் பலர் கண்பார்வை இழந்துள்ளனர். கூர்மையான இந்த குண்டு பாய்வதால் பலர் உயிரிழந்துவிட்டனர்.
ஹைகோர்ட்டில் வழக்கு
பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்றாக கலவரத்தை கட்டுப்படுத்த வேறு வழிகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதால் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துவதை தடை கோரும் மனுவை ஜம்மு- காஷ்மீர் ஹைகோர்ட் செப்டம்பர் 22-ஆம் தேதி நிராகரித்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் ஹைகோர்ட் பார் அசோசியேஷன் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கானது தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பெல்லட் ரக குண்டுகளால் பலர் காயமடைவதற்கு வேதனை தெரிவித்தார். மேலும் பெல்லட் ரக குண்டுகளுக்கு மாற்றாக திறம்பட செயல்படும் வேறு ஒன்றை ஆய்வு செய்ய வேண்டும். அதுகுறித்து மத்திய அரசு 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications