பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம் ஆக்கப்படுமா? 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
குழந்தைகளுக்கு நடுநிலைப் பள்ளி வரை யோகா பயிற்சி கட்டாயமாக்கப்படுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது.
டெல்லி: பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்கப்படுவது குறித்த வழக்கை வருகிற 7- ம் தேதி விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
யோகா மதச்சார்பற்றது என்று கலிபோர்னியா அப்பீல் நீதிமன்றம் அறிவித்து ஒராண்டுக்குப் பிறகு அந்தப் பயிற்சியில் மதச் சம்பிரதாயங்கள் அடங்கி உள்ளதா அல்லது அனைவரது உடல் நலத்திற்கு உகந்ததுதானா என்பது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அடங்கிய பெஞ்ச் முன்பு வருகிற 7- ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது, பள்ளிகளில் 1-லிருந்து 8-வது வகுப்பு வரை யோகா பயிற்சியை கட்டாயமாக்கப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி இதுசம்பந்தப்பட்ட மனுவை வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாவ் தாக்கல் செய்திருந்தார். அதில் உடல் நலத்தை பாதுகாக்கும் யோகாவுக்கு தேசிய கொள்கை உருவாக்கவும், அரசியல் அமைப்பின் சரத்து 21-ன் கீழ் மக்களின் உடல் நலம் கருதி மத்திய அரசுக்கு இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மேலும், வாழ்வுரிமை கல்வி மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு என்சிஆர்டி மனித வளமேம்பாட்டுத்துறை என்சிடியி மற்றும் சிபிஎஸ்சி நிலையங்கள் யோகா உடல் நலக் கல்விக்கு தரமான புத்தகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகளுக்கு உடல் நலக் கல்வி அளிக்க மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications