லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு: சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ். அவர் தமக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம் மீதான விசாரணையை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications