தமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்து திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி: தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த மனு மீதான விசாரணையின் போது திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகி, போட்ட முதலையும் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதனால் மனமுடைந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது.

குற்றச்சாட்டு
விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் நீரின்றி பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கான வங்கிக் கடன் சுமையாலும் பல விவசாயிகள் வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முழு பூசணிக்காயை...
அப்போது வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயிகள் யாரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவரவர் உடல் நல பாதிப்புகளால் உயிரிழந்துவிட்டனர் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட வாதி தரப்பு வழக்கறிஞர், உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து மே 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இன்று விசாரணை
அந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று தமிழக அரசின் பதில் மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்தான கவுடர் ஆகிய 3 அமர்வு முன்னர் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சரமாரி கேள்வி
விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விவசாயிகளுக்கு தெரியுமா?, ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?, விளை பொருளை வாங்க போதிய கொள்முதல் நிலையங்கள் உள்ளனவா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விவசாயிகள் தற்கொலை குறித்தும், தங்களின் கேள்விகள் குறித்தும் உரிய பதிலை வரும் திங்கள்கிழமைக்குள் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications