தமிழக விவசாயிகள் தற்கொலை.. திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்து திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி: தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த மனு மீதான விசாரணையின் போது திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி விவசாயப் பயிர்கள் கருகி, போட்ட முதலையும் எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இதனால் மனமுடைந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது.

குற்றச்சாட்டு
விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் நீரின்றி பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கான வங்கிக் கடன் சுமையாலும் பல விவசாயிகள் வேதனையடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

முழு பூசணிக்காயை...
அப்போது வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயிகள் யாரும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவரவர் உடல் நல பாதிப்புகளால் உயிரிழந்துவிட்டனர் என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட வாதி தரப்பு வழக்கறிஞர், உடல்நல பாதிப்புகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து மே 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

இன்று விசாரணை
அந்த வழக்கானது இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று தமிழக அரசின் பதில் மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்தான கவுடர் ஆகிய 3 அமர்வு முன்னர் விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சரமாரி கேள்வி
விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விவசாயிகளுக்கு தெரியுமா?, ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?, விளை பொருளை வாங்க போதிய கொள்முதல் நிலையங்கள் உள்ளனவா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விவசாயிகள் தற்கொலை குறித்தும், தங்களின் கேள்விகள் குறித்தும் உரிய பதிலை வரும் திங்கள்கிழமைக்குள் அளிக்க வேண்டும் உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications