ஹாதியா திருமணத்தில் தலையிடாமல் விசாரணை நடத்தலாம்... என்ஐஏவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
ஹாதியாவின் கலப்பு திருமணத்தில் தலையிடாமல் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஹாதியா கலப்பு திருமண வழக்கு விவகாரத்தில் அவருடைய திருமணம் பற்றிய கேள்விகள் எழுப்பாமல் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்கிற ஹாதியா தன்னுடைய கணவர் ஷஃபீன் ஜஹானை தீவிரவாதியாக சித்தரிக்க தன்னை வற்புறுத்துவதாக கூறி இருந்த குற்றச்சாட்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பு மறுத்துள்ளது. ஹாதியாவிடம் சட்டத்திற்குட்பட்டே விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர் குற்றவாளியா அல்லது தீவிரவாதியா என்பது தொடர்பான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

ஆதாரங்கள் மற்றும் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலேயே ஹாதியாவிடம் வெளிப்படையான விசாரணை நடைபெற்றதாகவும், ஹாதியா தங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும் என்ஐஏ சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. ஷஃபீன் ஜஹான் தீவிரவாதி போல சித்தரிக்கப்படுவதாக ஹாதியா கூறுவதிலும் உண்மையில்லை.
என்ஐஏ சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தி வருகிறது, நாங்கள் கேட்ட கேள்விகளைத் தான் அறிக்கையிலும் தாக்கல் செய்துள்ளோம் என்றும் என்ஐஏ விளக்கம் அளித்தது. மேலும் ஏறத்தாழ கலப்புதிருமணம் செல்லுமா என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்து விட்டதாகவும் இது தொடர்பாக 2 பேரிடம் மட்டுமே விசாரணை மிஞ்சியுள்ளதாகவும் கூறியுள்ளது.
கலப்புத் திருமண வழக்கில் முக்கிய சாட்சிகளாக கருதப்படும் பசல் முஸ்தபா மற்றும் ஷிரின் ஷஹந்த் இருவரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் இவர்கள் இரண்டு பேருமே வழக்கின் விசாரணை தொடங்கும் முன்னரே யேமன் சென்றுவிட்டனர். அவர்கள் நாடு திரும்பும் போது விசாரணைக்கு ஆஜராகும்படி லுக் அவுட் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.
மதம் மாறி ஹாதியா ஜஹானை திருமணம் செய்தது செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜஹான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி இவர்களின் கலப்பு திருமணம் பற்றி என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஹாதியா ஜஹான் திருமணம் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே நிபந்தனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications