உச்சநீதிமன்ற தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் பொருந்தும்.. கிரண்பேடி தலையில் பேரிடி
துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அதிகாரமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதன் துணை நிலை ஆளுநருக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வந்தது. துணை நிலை ஆளுநரின் அறையிலேயே முதல்வரும் அமைச்சர்களும் போராடும் நிலை கூட ஏற்பட்டது.

முதல்வரின் வரம்பில் துணை ஆளுநர் ஈடுபட்ட பல நடவடிக்கை எடுத்தது பிரச்சனை ஆனது. இதனால் உண்மையான அதிகாரம் யாருக்கு இருக்கிறது என விளக்கம் கேட்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
அதன்படி டெல்லியில் அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது. துணை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அவர்களால் தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றுள்ளது. டெல்லியில் எப்படி பிரச்சனை நிலவியது அதே போல்தான், புதுச்சேரியிலும் பிரச்சனை நிலவி வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையில் அதிகாரப் பகிர்வில் பிரச்சனை இருந்து வருகிறது.
துணை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கிறார், அதேபோல் மாநில முதல்வர் உருவாக்கும் விதிமுறைகளுக்கு எதிராக சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறார். சமயங்களில் இருவரும் நேரடியாக அறிக்கை விட்டு தாக்கிக் கொள்வதும் நடக்கிறது.
இந்த நிலையில் டெல்லி விவகாரத்தில் நீதிமன்றம் சொல்லி இருக்கும் கருத்து, புதுச்சேரிக்கு பொருந்தும். இதனால் முன்பு போல கிரண்பேடியால் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக செயல்பட முடியாது. இது கிரண்பேடிக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். அதேபோல் மற்ற மாநிலங்களில் ஆளுநர் செய்யும் ஆய்வுகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் .
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications