எல்.எல்.பி. படித்தவர்கள் பதிவுக்கு தடை விதித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டெல்லி: "35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களில் எல்.எல்.பி. பட்டம் பயின்று தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் எல்.எல்.பி. படித்துவிட்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில் வழக்கறிஞராக ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்துள்ளனர். ஆனால் இப்படி எல்.எல்.பி. படித்தவர்கள் தமிழக பார்கவுன்சிலில் பதிவதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை "35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளிமாநிலங்களில் சட்டம் பயின்று தமிழ்நாடு பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது" என இடைக்கால தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட எல்.எல்.பி. வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து இந்திய பார்கவுன்சில், தமிழக பார்கவுன்சில், மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications