Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கு தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தூக்கு தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தனியார் நிறுவன வழக்குகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் நேற்று வாதிட்டார்.

SC to take priority of Death Penalty cases: CJI

அப்போது, தனியார் நிறுவனங்களைத் தாண்டி பலரது வாழ்வு தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டார் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து. மேலும் தூக்கு தண்டனை வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முன்னுரிமை வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜிவ்காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரது விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

இந்த மனுவை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்படாத நிலையில் தலைமை நீதிபதி ஹெச். எல் தத்து தலைமை வகிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+