குணமடைந்த மன நோயாளிகளை வீட்டில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்கள்: சுப்ரீம் கோர்ட்டு வேதனை
மனநிலை பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வுக்கு வழிமுறைகள் வகுத்து தருமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி: மன நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான வழிகாட்டுதல் முறைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஜி.கே. பன்சால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, முழுமையாக குணப்படுத்தப்பட்ட நிலையில் 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்கள் பூரண குணம் அடைந்த போதிலும் தொடர்ந்து அடைப்பட்டு அவதியுறுகின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்களை மீட்டு உரிய மறுவாழ்வு அளித்திட வழி வகை செய்ய வேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி இருந்தார்.
அப்போது அவர் கூறுகையில், பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு தயாராக இருந்த போதிலும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவர்களை மீட்டு வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் இல்லாமல் உள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அதற்கு காலஅவகாசம் தேவை என்றார்.
அவரிடம் நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரம், மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு விவகாரம். ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்த பின்னரும், அவரை மீண்டும் வீட்டில் சேர்த்துக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை.
ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சையினால் குணம் அடைந்த பின்னர், அவரை மனநல புகலிடத்திலோ, மருத்துவமனையிலோ அரசு தொடர்ந்து வைத்திருக்க முடியாது. குணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமூகத்தில் அவர்கள் வாழ வழிவகை செய்வதை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு கூறினர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 8 வார காலம் அவகாசம் வழங்கியது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications