சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாமா?.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
Recommended Video
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களிலும், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
[ அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29-ஆம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட் ]
பல வருடமாக இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
யார் வழக்கு
சபரிமலை கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய இளைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றினார்கள்.
என்ன கோரிக்கை
இது பெண்களின் உரிமைக்கு எதிரானது என்று மனுவில் கூறப்பட்டது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறப்பட்டது. அதே சமயம் சபரிமலை கோவில் நிர்வாகம் இந்த மனுவிற்கு எதிராக கடுமையாக வாதம் செய்தது. ஆனால் கேரளா அரசு சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
நீதிமன்றம் என்ன கூறியது
இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த நடைமுறை அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஏற்கனவே நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சட்ட பிரிவு 14,15,17, 26, 27 ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த நடைமுறை உள்ளது என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தனர்.
நாளை தீர்ப்பு
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்க இருக்கிறது. நாளை காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது.