"பிறப்புறுப்பில்.." கொடூரம்.. மரியாதை தரலனைனு கேரள மாணவர் கையை உடைத்து ராகிங் சித்திரவதை!
கண்ணூர்: கேரளாவில் நர்சிங் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களின் பிறப்புறுப்பில் டம்பள்ஸை தொங்கவிட்டு ராகிங் செய்த கொடூர சம்பவத்தில் 5 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கதற்போது ண்ணூரில் 11ஆம் வகுப்பு மாணவர் மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி சீனியர் மாணவர்கள் அவரின் கைகளை உடைத்துள்ள சம்பவம் வெளி வந்துள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை , சீனியர்கள் 5 பேர் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூனியர் மாணவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் பிறப்புறுப்புகளில் டம்பள்ஸ்களை தொங்கவிட்டு கொடுமை செய்தர்.

அதேபோல் காம்ப்ஸ் வைத்து மாணவர்களின் உடலிலும் காயத்தை ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் இதனை வீடியோவாக எடுத்து பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து விரக்தியடைந்த ஜூனியர் மாணவர்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து, சீனியர் மாணவர்கள் 5 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
தொடர்ந்து ராகிங் தடுப்பு சட்டத்தின் போது 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த 2 நாட்களிலேயே பள்ளியிலும் ராகிங் கொடூரத்தால் 11ஆம் வகுப்பு மாணவரின் கைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கண்ணூரில் இயங்கி வரும் கொளவலூர் பிஆர் நினைவுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவரை சீனியர்கள் மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி, அவரை ராகிங் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவரை துன்புறுத்திய சீனியர்கள், அவரின் கைகளை உடைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சீனியர் மாணவ்கர்கள் 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி நிஹால் கூறுகையில், போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்று சீனியர்கள் பாதிக்கப்பட்ட மாணவரை கொடூரமாக தாக்கி கையை உடைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 5 பேரும் தாக்கியதால், பாதிக்கப்பட்ட அந்த மாணவர் தலசேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் அடுத்தடுத்து ராகிங் கொடூரங்கள் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications