நொய்டாவில் டியூஷனில் இருந்து வீடு திரும்பிய சிறுமி கடத்தி 3 பேரால் பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நொய்டாவில் 10 வகுப்பு மாணவி 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி புதன்கிழமை மதியம் டியூஷனுக்கு சென்றுவிட்டு இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பினார். அவர் வீட்டுக்கு செல்கையில் அவரை 3 வாலிபர்கள் காரில் நொய்டாவுக்கு கடத்திச் சென்றனர். நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை அந்த 3 பேரும் பாலியல் பாலத்காரம் செய்தனர். பின்னர் சிறுமியை அவரது வீட்டுக்கு அருகே விட்டுவிட்டுச் சென்றனர்.

Schoolgirl allegedly gangraped in Noida, 3 detained

இது குறித்து சிறுமி புதன்கிழமை இரவு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர். அதில் ஒரு வாலிபர் சிறுமிக்கு பழக்கமானவர்.

கடந்த மாதம் டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் பதாவ்னில் 14 வயது சிறுமியை 2 போலீஸ்காரர்கள் பலாத்காரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+