காஷ்மீரில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஜம்மு காஷ்மீரில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளதால் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.

ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் புர்கான் வானி பாதுகாப்புப் படையினரால் கடந்த ஜூலை 8 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். புர்கான் வானி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாத அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Schools reopen in Kashmir after a months

கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டன. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வந்தனர். இதற்கிடையே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ள் நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 94.53 சதவீத மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.

காஷ்மீரில் நிலவிய தொடர் பிரச்சினையாலும் அடுத்தடுத்து குளிர்கால இடைவெளியாலும் பள்ளிகள் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் இருந்தன. இந்த நிலையில் புதன்கிழமை முதல் பள்ளிகள் வழக்கமாக இயங்கும் என்று காஷ்மீர் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. எனினும் காஷ்மீரின் மச்செல், குரேஸ், தங்தர் ஆகிய இடக்களில் பனி நீடிப்பதால் அங்கு பள்ளிகள் மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+