மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை வேட்பாளரானார் ஜோதிராதித்ய சிந்தியா.. அறிவித்தது பாஜக
போபால்: மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்திலிருந்து அனுப்பப்பட்ட 3 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக சார்பில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை வேட்பாளராக இருவர் அறிவிக்கப்பட்டனர்.

அதில் இன்று மதியம் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு வேட்பாளராக ஹர்ஷ் சிங் அறிவிக்கப்பட்டார்.
கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதால் கடந்த ஓராண்டாக மன உளைச்சலில் இருந்து வந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் நெருங்கி பழகக் கூடியவர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்து நேற்றைய தினம் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்தவுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தையும் சோனியாவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து இன்று மதியம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் சிந்தியா. அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்தார். அப்போது சிந்தியா கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதை உறுதியாக அறிந்ததால் பாஜகவில் இணைந்தேன் என தெரிவித்தார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications