சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. போன் சுவிட்ச் ஆப்.. ஆல் இஸ் வெல்.. திக்விஜய் சிங் ஷாக் விளக்கம்!

காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

போபால்: காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அங்கு கட்சிக்குள் நிலவிய சிறுசிறு குழப்பங்கள் தற்போது மொத்தமாக ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.

    மொத்தமாக 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இதை தடுக்கும் பொருட்டு மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 17 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் எம்பி

    காங்கிரஸ் எம்பி

    காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக் விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிந்தியாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் எங்களால் அவரிடம் பேச முடியவில்லை. அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    அவர் குணம் அடைந்ததும் எங்களிடம் பேசுவார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாக நிலையாக இருக்கிறது. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் சிலர் தோல்வி அடைவார்கள். மக்களின் வாக்குகளை அவமதிக்கும் நபர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். அவர்களுக்கு மாநில மக்களே நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    ஒன்று சொல்வேன்

    ஒன்று சொல்வேன்

    என்னிடம் நீங்கள் கேட்டால் நான் ஒன்று சொல்வேன். இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. யார் நேர்மையானவர்களோ, யார் நல்லவர்களோ அவர்கள் காங்கிரஸ் பக்கம் இருப்பார்கள். அவர்கள் காங்கிரஸ் உடன் நெருக்கமாக இருப்பார்கள்.தற்போது நிலவி வரும் பிரச்சனை விரைவில் சரியாகும் என்று திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+