பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேச்சு.. மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு
பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேசியதாக மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோட்டா: பாகிஸ்தானை பாராட்டியும், இந்தியாவை இகழ்ந்தும் பேசியதாக மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குஜராத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மணி சங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே கண்டித்து அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.

இந்நிலையில் கராச்சியில் நடந்த 9-ஆவது கராச்சி கலாச்சார விழாவில் கடந்த 11-ஆம் தேதி மணி சங்கர் அய்யர் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விரும்பியும் இந்தியா அதில் அக்கறை கொள்ளவில்லை.
எனக்கு பாகிஸ்தான் மிகவும் பிடிக்கும். அதேபோல் பாகிஸ்தானியர்களுக்கும் என்னை பிடிக்கும். இந்த அதீத அன்பு அளவுக்கு எனக்கு இந்தியாவில் வெறுப்புதான் கிடைத்தது என்று அவர் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து பாஜகவின் கோட்டா மாவட்டத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் அசோக் சௌத்ரி, மணி சங்கர் அய்யருக்கு எதிராக தேச துரோக வழக்கை பதிவு செய்துள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மணி சங்கர் பேசியது எனது தேசப்பற்றை பாதித்துள்ளதாக அசோக் சௌத்ரி தெரிவித்துள்ளார். மணி சங்கர் அய்யர் கூறிய கருத்துகள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தும் போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் முறையான பதிலடி கொடுக்கும் போது கூறப்பட்டுள்ளன என்றும் அசோக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு கோடா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications