திருப்பதி பாலாஜி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்: தேவஸ்தானம்
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சீமாந்திராவிற்கே சொந்தம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, சீமாந்திரா என 2 மாநிலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 2-ந்தேதி 2 மாநிலமும் அதிகாரப் பூர்வமாக பிரிகிறது.
இதையொட்டி அரசு ஊழியர்கள், அரசின் சொத்துக்கள், கார்கள் மற்றும் அரசு கோப்புக்கள் ஆகியவை இருமாநிலத்துக்கும் பிரிக்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையான் கோவில் சொத்து
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் சீமாந்திராவில் உள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக திருப்பதி உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளது.

சீமாந்திராவிற்கே சொந்தம்
தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளது. மாநிலம் பிரிக்கப்பட்டாலும் தெலுங்கானாவில் உள்ள திருப்பதி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக கோவில் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருமானம்
திருப்பதி பாலாஜி கோவிலுக்கு தினந்தோறும் 50000 பக்தர்களுக்கு மேல் வருகை தருகின்றனர். உண்டியல் வருமானம் மட்டும் தினசரி 2 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருமானம் வருகிறது.

பணக்கார கோவில்கள்
திருப்பதி கோவில் மட்டுமல்லாது ஆண்டுக்கு பத்து கோடிக்கு மேல் வருமானம் வரக்கூடிய 16 முதல் 19 கோவில்கள் சீமாந்திர மாநிலத்தின் வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications