சீமாந்திராவின் புதிய "சிங்கப்பூரை" நிர்மானிக்க உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யும் நாயுடு அரசு!
ஹைதராபாத்: மலேசியாவில் ஒதுக்கப்பட்ட சிங்கப்பூர் எப்படி பின்னாளில் மிகப் பெரிய அருமையான நாடாக, நகரமாக உருவெடுத்ததோ அதேபோல தற்போது தெலுங்கானாவிடம் ஹைதராபாத்தைப் பறி கொடுத்துள்ள நிலையில் புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் சீமாந்திரா அரசு, புதிய தலைநகரை சிங்கப்பூர் போல அதி நவீன வசதிகளுடன் கூடிய நகரமாக உருவெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
சிங்கப்பூரைப் போலவே அனைத்து வசதிகளையும் கொண்ட அற்புதமான நகராக புதிய தலைநகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.
இதற்காக அது பல வழிகளிலும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக புதிய நகருக்குத் தேவையான நிதிய மக்களிடம் வசூலிப்பதற்காக உண்டியல் ஏந்தியும் அது நிதி வசூலில் ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூரில் நேரில் ஆய்வு
சிங்கப்பூருக்கு நேரில் போய் அந்த நகரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு சிங்கப்பூர் செல்லவுள்ளது.

நிதி வசூல்
மறுபக்கம் புதிய தலைநகருக்கு மக்களிடமிருந்து நிதி சேகரிக்க்த தொடங்கியுள்ளனர். பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார்.

உண்டியல் மூலமும் வசூல்
ஹைதரபாத்தில் உள்ள சீமாந்திர மாநில தலைமைச் செயலகத்தில் எல்.பிளாக் பகுதியில் தலைநகருக்கு நிதி திரட்ட பெரிய உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

உண்டியலில் பணம் போடலாம்
இந்த உண்டியலில் அனைவரும் தங்களது நிதியைச் சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இங்கு வருவதால் தாராளமாக நிதி கிடைக்கும் என அரசு கருதுகிறது. விரைவில் மேலும் 2 உண்டியல் வைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

10 வருடங்களுக்குப் பிறகு
முதல் பத்து வருடங்களுக்கு ஹைதராபாத், இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சீமாந்திரா தனக்கென புதிய தலைநகரை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications